காணாமல்போனோரில் 351 நபர்களின் விபரத்தை வெளியிட்டது பன்னாட்டு உண்மை மற்றும் நீதி திட்டம் அமைப்பு!

0
755


2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போர்க் காலப்பகுதியில் காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக கருதப்படும் நபர்கள் தொடர்பான விவரங்களை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் உள்ளிட்ட காணாமல்போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டதாக க்கருதப்படும் 351 நபர்களின் பெயர்பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளர் சின்னத்தம்பி மகாலிங்கம் என்ற இளம்பரிதியின் குடும்ப ஒளிப்படத்தையும் பன்னாட்டு உண்மை மற்றும் நீதி திட்டம் (International Truth and Justice Project) அமைப்பு வெளியிட்டுள்ளது.
இளம்பரிதியின் மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு ஆண் பிள்ளை ஆகியோரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களைக் கடைசியாக வட்டுவாகல் பகுதியில் கண்டதாகச் சாட்சியங்கள் பதிவாகியுள்ளதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த அனைவரும் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டுள்ளதுன், அவர்களது குடும்ப படம் ஒன்றையும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here