கொழும்பு – தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்த கிளிநொச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த அனர்த்தம் இன்று ( 8 ) பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தாமரைக் கோபுரத்தின் 16 ஆம் மாடியிலிருந்து வீழ்ந்ததில் இந்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
விபத்தில் கிளிநொச்சி, அத்தரேகுளம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய கோணேஸ்வரன் நிதர்ஷன் எனும் இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.