அன்னை பூபதிக்கு மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது அமர்வில் வணக்கம் செலுத்தப் பட்டது !

0
240

மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது அமர்வு இன்று (16) காலை ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.
மாநகர முதல்வர் தி.சரவணபவன் முன்னிலையில் ஆரம்பமாகிய மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது அமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் வி.தவராஜாவின் முன்வைப்பினையடுத்து தமிழீழ தாயவள் அன்னை பூபதிக்கு மூன்று நிமிட வணக்கம் செலுத்தப்பட்டது.
தமிழர்களுடைய பிரச்சினைத் தீர்வுக்காக உண்ணா நோம்பிருந்து உயிர் நீத்த அன்னை பூபதியில் 30 ஆவது ஆண்டு நினைவு தினம் 19ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் அன்றைய தினம் மாநகர சபை அமர்வு இல்லை என்ற அடிப்படையில் இன்றைய அமர்வில் 3 நிமிட வணக்கம் செலுத்த சபை அனுமதிக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் வி.தவராஜாவின் கேட்டுக் கொண்டார்.
இதனை அனைவரும் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் அன்னை பூபதிக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து சபை அமர்வுகள் நிகழ்ச்சி நிரலின் படி நடைபெறுகின்றன .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here