சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் இன்று நடத்திய தாக்குதலில் 13 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி!

0
215

mavojistசத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் இன்று நடத்திய தாக்குதலில் 13 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியாகினர். சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர்.

இதில் 2 உயர் அதிகாரிகள் உட்பட 11 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மாவோயிஸ்டுகள் இந்த ஆண்டு நடத்தியுள்ள மிகப் பெரிய தாக்குதல் சம்பவம் இது.

கடந்த மாதம் சத்தீஸ்கரில் விமானப் படையினருக்கு பாதுகாப்பாக சென்ற வாகனம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில் விமானப் படை கமாண்டோ மற்றும் 6 சி.ஆர்.பி.எப். வீரர்கள் படுகாயமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here