தென்மராட்சியில் பரவும் உண்­ணிக் காய்ச்­சல்!!

0
193

தென்­ம­ராட்­சிப் பிர­தே­சத்­தில் கடந்த உண்­ணிக் காய்ச்­ச­லால் பீடிக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துக் காணப்­ப­டு­கி­றது என சாவ­கச்­சேரி சுகா­தார திணைக்­க­ளத்­தி­ன­ர் தெரி­வித்துள்ளார்.
கடந்த மூன்று தினங்­க­ளில் 15க்கு மேற்­பட்­டோர் உண்­ணிக் காய்ச்­ச­லால் பீடிக்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர் எனத் தெரி­விக்­கப்­பட்­டது. உண்­ணிக் காய்ச்­ச­லால் பீடிக்­கப்­பட்ட அனை­வ­ரும் தற்­போது பிர­தே­சத்­தில் இடம்­பெற்­று­வ­ரும் நெல் அறு­வ­டை­யில் ஈடு­ப­டு­வோர் எனக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.
நெல் அறு­வ­டை­யின் போது வைக்­கோல்­க­ளில் காணப்­ப­டும் உண்­ணி­கள் கடிப்­ப­தால் காய்ச்­சல் ஏற்­ப­டு­கின்றது. இரு தினங்­க­ளுக்கு மேல் தேக உளை­வு­டன் காய்ச்­சல் காணப்­ப­டின் அரு­கில் உள்ள மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெறு­மா­றும் அறி­வித்­துள்­ள­னர்
கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த பெரு­மழை மற்­றும் வெள்­ளம் கார­ண­மாக குடி­யி­ருப்­பு­க­ளுக்­குள் வெள்­ளம் புகுந்­த­தால் டெங்கு காய்ச்­ச­லால் பீடிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நிக­ராக உண்­ணிக் காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளும் சிகிச்சை பெற்று வந்­த­னர். கடந்த வரு­டம் பெரு­மழை பெய்த போதி­லும் பெரு­வெள்­ளம் குறை­வாக ஏற்­ப­டா­த­தால் உண்­ணிக் காய்ச்­ச­லால் பீடிக்­கப்­பட்­ட ­ வர்­க­ளின் எண்­ணிக்கை கடந்த வரு­டம் மிகக்­கு­றை­ வா­கவே காணப்­பட்­டது.
பிர­தே­சத்­தில் கால­போக நெற்­செய்கை அறு­வடை ஆரம்­பித்த நாள் தொடக்­கம் உண்­ணிக் காய்ச்­ச­லால் பீடிக்­கப்­பட்டு சிகிச்சை பெறு­வோ­ரின் எண்­ணிக்கை திடீ­ரென அதி­க­ரித்­துள்­ள­து எ­ன­வும் அறு­வ­டை­யில் ஈடு­ப­டும் பொது­மக்­கள் உண்­ணிக் கடி­யி­லி­ருந்து தம்­மைப் பாது­காக்­கும் உடை­களை அணிந்து அறு­வ­டை­யில் ஈடு­ப­டு­மா­றும் அறி­வித்­துள்­ள­னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here