வெலிக்­க­டை சிறைக் கைதி­கள் திட்­ட­மிட்­டு படு­கொலை!

0
578


1983 யூலை வெலிக்­கடை சிறைச்­சா­லை­யில் இடம்­பெற்ற கல­வ­ரத்­தின் போது 27 தமிழ் கைதி­கள் கொல்­லப்­பட்ட விவ­கா­ரம் தொடர்­பி­லான விசா­ர­ணை­கள் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரால் நிறைவு செய்­யப்­பட்டு, அறிக்கை சட்ட மா அதி­ப­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.
விசா­ர­ணை­க­ளின் போது வெளி­யி­டப்­பட்ட சாட்­சி­க­ளின் பிர­கா­ரம் சிறை­யில் இருந்து கல­வ­ரத்­தின் இடை நடுவே முச்­சக்­கர வண்­டி­யில் தப்­பி­யோ­டும்போது பொலிஸ் சிறப்பு அதி­ர­டிப் படை­யி­ன­ரால் 8 பேரும், பொலிஸ் சிறப்பு அதி­ர­டிப் படை மீது தாக்­கு­தல் நடத்­தும் போது பதில் தாக்­கு­த­லில் இரு­வ­ரும் கொல்­லப்­பட்­டுள்­ள­தா­க­வும், கல­கம் அடக்­கப்­பட்ட பின்­னர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு எட்­டு­பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­தா­க­வும் குற்­றப் புல­னாய்­வுப் பிரிவு கொழும்பு மேல­திக நீதி­வான் ரங்க திஸா­நா­யக்­க­வுக்கு அறி­வித்­துள்­ளது.
1983 இல்தமிழர்களுக்கெதிராக இடம்பெற்ற கறுப்பு யூலை வன்முறை நிகழ்வுகளின் போது இடம்பெற்ற உச்சக்கட்ட நிகழ்வைக் குறிக்கும். இதன் போது மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சக சிங்களக் கைதிகளால் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்.. இப்படுகொலை நிகழ்வில் எவரும் இதுவரையில் குற்றஞ்சாட்டப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை.
இப்படுகொலை நிகழ்வானது இரண்டு வௌ;வேறு நாட்களில் நடைபெற்றது. இரண்டும் கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையான வெலிக்கடையில் இடம்பெற்றன. முதலாவது படுகொலை யூலை 25, 1983 இல் 35 தமிழ்க் கைதிகள் சக சிங்களக் கைதிகளினால் கத்தி மற்றும் வாள்களினாலும் பொல்லுகளினாலும் குத்திக் கொல்லப்பட்டனர். இரண்டாவது நிகழ்வு இரண்டு நாட்களின் பின்னர் யூலை 28ம் திகதி இடம்பெற்றது. இதில் 18 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்..
இப்படுகொலை நிகழ்வில் தப்பிப் பிழைத்தவர்களின் வாக்குமூலத்தின்படி சிறைச்சாலை அதிகாரிகளே அறைக்கதவுகளின் திறப்புகளை சிங்களக் கைதிகளுக்கு கொடுத்ததாக தெரிவித்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here