இனத்­தின் குர­லாக ஒலிப்­ப­தா­லேயே விமர்­ச­னங்­க­ளை எதிர்­கொள்­கி­றார் முத­ல­மைச்­ச­ர் விக் னேஸ்­வ­ரன்!!

0
541

 

இலங்கை அர­சி­ய­லில் இன்று அதி­கம் பேசப்­ப­டும் தமிழ் அர­சி­யல் தலை­வ­ராக வட மாகாண முத­ல­மைச்­ச­ர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் உள்­ளார். அத­னால் வடக்கு மாகாண சபை­யின் அடுத்த முத­ல­மைச்­ச­ரா­க­வும் அவரே இருப்­பார்.
இவ்­வாறு வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரும் தமிழ்த்­தே­சிய பசுமை இயக்­கத்­தின் தலை­வ­ரு­மான பொ.ஐங்­க­ர­நே­சன் தெரி­வித்­தார்.
விக்­னேஸ்­வ­ர­னுக்கு ஒரு­புறம் அவ­ரது அர­சி­யல் எதி­ரா­ளி­கள் அவரை அர­சி­யல் அனு­ப­வம் இல்­லா­த­வர் என்­றும், நிர்­வா­கம் தெரி­யா­த­வர் என்­றும், அபி­வி­ருத்­திக்கு எதி­ரா­ன­வர் என்­றும், வடக்கு மாகா­ணத்­துக்கு வரு­கின்ற நிதி­யைச் சரி­வ­ரப் பயன்­ப­டுத்­தத் தெரி­யா­மல் திருப்பி அனுப்­பு­கின்­றார் என்­றும் கடு­மை­யாக விமர்­சித்­து­ வ­ரு­கி­றார்­கள்.
ஆனால், இன்­னொ­ரு­புறம் வடக்­கின் வெகு­மக்­களோ முத­லமைச்­ச­ரைக் கொண்­டா­டு­கி­றார்­கள். முத­ல­மைச்­சர் எவ­ருக்­கும் அடி­ப­ணி­யா­மல், எதற்­கும் சோரம்­போ­ககாமல், இனத்­தின் குர­லாக ஒலிப்­ப­தா­லேயே இவ்­வ­ளவு விமர்­ச­னங்­க­ளை­யும் அவர் எதிர்­கொள்­கி­றார் என்­பதை அவர்­கள் தெளி­வா­கவே புரிந்து வைத்­தி­ருக்­கி­றார்­கள்.
உள்­ளு­ராட்­சிச் சபை­கள் முற்­று­மு­ழு­தா­கப் பிர­தே­சத்­தின் அபி­வி­ருத்­தி­யு­டன் தொடர்­பா­னவை. இதன்­கா­ர­ண­மாக உள்­ளு­ராட்சி சபைத் தேர்­த­லின்­போது அபி­வி­ருத்­தி­பற்றி மட்­டும் பேசி­னால் போதும், அர­சி­யல் பற்­றிப் பேச­வேண்­டாம் என்று சில தரப்­பி­னர் கூறி­வ­ரு­கி­றார்­கள். இனப் பிரச்­சினை கார­ண­மா­கவே எமது பிர­தே­சங்­க­ளின் அபி­வி­ருத்தி பாதிக்­கப்­பட்­டது.
எனவே எமது பிர­தே­சங்­க­ ளில் நிலை­யான அபி­வி­ருத்தி என்­பது தமிழ்­மக்­க­ளுக்­கான நிலை­யான, முழு­மையா­ன­அ­ர­சி­யல் தீர்­வி­லேயே தங்­கி­யி­ருக்­கி­றது. இத­னால், அந்­தத் தீர்வை எட்­டும்­வரை அபி­வி­ருத்­திப் பற்­றிப் பேசும்­போது அதன் பின்­னால் உள்­ள­அ­ர­சி­யல் பற்­றி­யும் நாம் உரத்­துப் பேச வேண்­டிய கட்­டா­யத்­தி­லேயே உள்­ளோம் என்­றார் ஐங்­க­ர­நே­சன் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here