கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் வீரவணக்க நிகழ்வு 21.01.2018 மாலை 4.00 மணிக்கு ஸ்ராஸ்பூர் பிரான்சில் நடை பெற்றது.
முதல் நிகழ்வாக பொதுச்சுடரை கரும்புலி மாவீரன் மேஜர் திருமாறனின் சகோதரர் பகிரதன், வீரவேங்கை இதயன்னின் சகோதரர் அப்பன் முன்னை நாள் போராளிகள், ஏனைய மக்கள் பிரமுகர்களும் ஏற்றிவைத்தனர்.
மாவீரர் ஈகைச்சுடரை வீரவேங்கை மயிலினியின் சகோதரர் முகுந்தன் ஏற்றிவைத்து, மலர் வணக்கத்தையும் ஆரம்பித்து வைத்தார்.
நினைவுரைகளை திரு உதயன் , திரு அப்பன் ஆகியோர் நிகழ்த்தினர். கலைநிகழ்வுகள் என்பன நடைபெற்று நிகழ்வு நிறைவு பெற்றது.