ஜோசப் பரராஜசிங்கத்தின் 12-ம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு!

0
225

வடகிழக்கில் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திங்கட்கிழமை நடைபெற்றுள்ளன.
இந்த நினைவேந்தல் நிகழ்வுகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்து நடத்
தியிருந்தது. பிற்பகல் 5.30 மணியள வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தலை மையில் யாழில் உள்ள அலுவலகத்தில் அக வணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் திருவு ருவப் படத்துக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன் னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர் மாலை அணிவித்தார்.

நினைவுச் சுடரினை நல்லூர்த் தொகுதி வேட்பாளர் வாசுகி சுதாகர் ஏற்றிவைத்தார். தொடர்ந்து மலரஞ்சலியும் நினைவுரைக ளும் இடம்பெற்றன. இதே போன்று கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு தாமரைக் கேணியில் கட்சியின் மாவட்ட இணைப்பா ளர் தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
இவ்நினைவேந்தல்நிகழ்வில்கட்சியின் ஆதரவாளர்கள் உணர்வாளர்கள் என பலர் கலந்துகொண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோசப் பரராஜசிங்கத்தின் உருவப்படத்திற்கு கட்சி இணைப்பாளர், சுரேஷ் மட்டுநகரப் பொறுப்பாளர் உமாகாந் தன், வவுணதீவு பொறுப்பாளர் வினோதன், வெல்லாவெளி பொறுப்பாளர் குமாரசிங்கம், வாழைச்சேனை இளைஞர் அணித்தலை வர் குணசேகரன் உட்பட கட்சியின் முக்கிய ஸ்தர்கள் கலந்துகொண்டு ஈகச் சுடர் ஏற்றி மலர் தூவி ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here