திடீர் காய்ச்சல் எட்டு வயது சிறுவன் பலி !

0
211


காய்ச்சலினால் பீடிக்கப் பட்ட எட்டு வயது சிறுவன் ஒரு வன் நான்கு நாட்களின் பின்னர் நேற்று (26) யாழ் போதனா வைத்திய சாலையில் உயிரிழந்துள்ளான். உடுப்பிட்டி நாவலடியை சேர்ந்த பேரின்பராசா நிவாஸ் (வயது 08) என்ற மாணவனே மேற்படி உயிரிழந்துள்ளார் .
குறித்த சிறுவனுக்கு கடந்த 22 ஆம் திகதி இரவு காய்ச்சல் காய்ந்துள்ளது. தாய் பனடோல் கொடுத்துள்ளார்.
23 ஆம் திகதி யும் காய்ச்சல் தொடர்ந்து காய்ந்த காரணத் தினால் பெற்றோர் சிறுவனை மந்திகை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கிருந்து அன்றையதினமே மேல திக சிகிச்சைக்கென 2 மணியளவில் யாழ் போதனா வைத்திய சாலைக்கு அனுப்பப்பட் டான். அங்கு தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்துள்ளான்.
இந்த நிலையில் நேற்று காலை திடீரென இச் சிறுவன் உயிரிழந்துள்ளான். இந்த இறப்புக்கான காரணம் கண்டறியப்பட வில்லை என்பதுடன் பிரேத பரிசோதனைக் காக சடலம் வைத்தியசாலையில் வைக்கப் பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here