பேருந்து விபத்து இருவர் பலி 44 பேர் காயம்!

0
238

 


கொழும்பு நோக்கி ஊருபொக்கையில் இருந்து வந்த தனியார் பேருந்து இன்று (23) அதிகாலை 2.15 மணியளவில் இரத்தினபுரி – எம்பிலிபிட்டிய பிரதான வீதியின் பெல்மதுளை பதுல்பான எனும் இடத்தில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் உள்ள ஆற்றின் அருகில் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் பலியானதுடன் பேருந்தில் பயணித்த 44 பேர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் இரத்தினபுரி மற்றும் காவத்தை வைத்தியசாலை களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் 41 பேரும் காவத்தை ஆதார வைத்தியசாலையில் 3 பெரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில் ஊருபொக்க பிரதேசத்தை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருமே பலியாகியுள்ளதாகம் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி விபத்துக்குள்ளான பேருந்து அதன் நடத்துனரால் செலுத்தப்பட்டு வந்ததாகவும் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here