யாழ். போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட  இருதய சத்திரசிகிச்சைகள் வெற்றி!

0
427

யாழ். போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக நடத்தப்பட்ட இருதய சத்திரசிகிச்சை வெற்றியடைந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் இரண்டு இருதய சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் எம்.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்கள் குழுவினரால் திறந்த இருதய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு – விஸ்வமடு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய பெண்ணுக்கும் வவுனியாவைச் சேர்ந்த 27 வயதுடைய ஆண் ஒருவருக்கும் இருதய சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here