யாழ் நோக்கிச் சென்ற இளைஞர்களை துரத்தி துரத்தி தாக்கிய யானைக் கூட்டங்கள்!

0
180

யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த இரு இளைஞர்கள் யானை தாக்குதலில் இருந்து உயிர் தப்பியுள்ளதாக தெரிய வருகிறது.

மடு – பள்ளமடு பிரதான வீதியில் பாலம்பிட்டியை அண்மித்த பகுதியில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞர்களை வீதிக்கு வந்த காட்டு யானைகள் தாக்க முற்பட்டதால் மயிரிழையில் உயிர் தப்பினர்.

நேற்றிரவு சங்குப்பிட்டி வீதியால் யாழ்ப்பாணம் செல்வதற்காக சென்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின் பின் அவர்கள் யாழ்ப்பாணம் செல்லும் பயணத்தை இடை நிறுத்தி விட்டு  வீட்டுக்கு சென்றுள்ளனர்.

குஞ்சுக்குளத்தை சேர்ந்த இரு இளைஞர்களே இவ்வாறு வீடு திரும்பியுள்ளனர்.
இந்தப் பகுதியில் யானைகளின் அச்சுறுத்தல் தீவிரம் அடைந்துள்ளதாக அந்தப் பகுதிகள் மக்கள்தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய துறைசார் அதிகாரிகள் கவனம்செலுத்த வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here