வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

0
188

வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கல்வியற்கல்லூரிக்குச் சொந்தமான வான் ஒன்று ஈரப்பெரியகுளம் பகுதியில் வீதியில் நடந்து சென்ற ஒருவர் மீது மோதியுள்ளது. காயமடைந்த நபரை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் வீதியில் நடந்து சென்றவரான என்.விலால் என்ற 46 வயதுடைய நபரே மரணமடைந்தவராவார்.
இதையடுத்து குறித்த வாகனத்தையும், சாரதியையும் பொலிசார் கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here