யாழ்ப்பாணம் மந்திகையில் வீடு புகுந்து கொள்ளை!

0
241

யாழ்ப்பாணம் பருத்திதுறை மந்திகை பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் தங்காபரணங்கள் மற்றும் பணத்தினை கொள்ளையிட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு 12.30 அளவில் வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத குழுவினர், வீட்டு உரிமையாளர்களை மிரட்டி தங்காபரணங்களையும் பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முகமூடியணிந்து வந்த இருவர் கூரிய ஆயுதம் மற்றும் பொல்லுகளை காட்டி மிரட்டல் விடுத்துள்ளர். 13 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான சுமார் 30 பவுண் தங்காபரணங்களும் 40 ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here