சர்வதேச மகளிர் தினம் இன்றைய நாளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மகளிர் அணியின் ஏற்பாட்டில் செல்வி.நிதர்சினி விஜயசிங்கம் தலைமையில் காலை 9 மணிக்கு பளை பல நோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பா.உறுப்பினருமான மாவை.சேனாதிராசர, வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் த.குருகுலராசா, வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் ப.அரியரத்தினம், வடக்குமாகாண சபை உறுப்பினர் மேரிகமலா குணசீலன் , யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் திருமதி.நாச்சியார் செல்வநாயகம் உட்பட பிரதேசபைகளின் உறுப்பினர்கள்; கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணி உறுப்பினர்கள்; கிளிநொச்சி தமிழ் தேசிய கூட்டமைப்பின் இளைஞர் அணி உறுப்பினர்கள் மாவட்டத்தில் பல பாகங்களிலும் இருந்து கலந்துகொண்ட மக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.