முல்லைத்தீவில் படகு கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!

0
206

முல்லைத்தீவு – குமுழமுனைப் பிரதேசத்தில் உள்ள ஆறுமுகத்தான் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த படகில் 6 பேர் பயணித்திருந்த நிலையில் ஐந்து பேர் காப்பற்றப்பட்டிருந்தனர்.
காணாமற்போயிருந்த ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (08) மாலை 5 மணியளவில் அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஆறுமுகத்தான் குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 29 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று பிரேதப் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here