மாணவி ஆசிரியரால் துஷ்பிரயோகம்: ஓமந்தையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

0
160

வவுனியா – ஓமந்தை, அலகல்லுபோட்டகுளம் பகுதியில் பாடசாலை மாணவியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஓமந்தை மத்திய கல்லூரியில் இருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி, ஓமந்தை பொலிஸ் நிலையம் வரை சென்றதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவி வயிற்றுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர் கர்ப்பம் தரித்துள்ளமை தெரிய வந்ததையடுத்து, பொலிஸார் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here