ரணில் விக்ரமசிங்கவுக்கு திருமாவளவன் கண்டனம்!

0
153

timthumbபிரதமர் மோடி இலங்கை செல்லவிருக்கும் நிலையில், அந்த நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கும், தமிழக மீனவர்களுக்கும் எதிராகப் பேசியிருப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழக தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்தியாவுக்கும், தமிழக மீனவர்களுக்கும் எதிரான கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்தியப் பிரதமர் மோடி இலங்கை செல்லவிருக்கும் நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இலங்கையில் இருக்கும் நிலையில், அவர் இப்படிப் பேசியிருப்பது ஆத்திரமூட்டும் செயலாகும்.

பிரதமர் மோடி இலங்கை செல்லும் முன் அந்நாட்டின் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

ரணில் விக்ரமசிங்கவின் பேச்சுக்கு இந்திய அரசு தனது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here