தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வுகளிற்கான ஏற்பாடுகள் தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் புனரமைக்கப்பட்டு ஆயத்தப் படுத்தப்பட்டு வருகின்றன. மன்னார் மாவட்டத்தில் உள்ள ஆட்காட்டிவெளி, பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லங்கள் கடந்த இரண்டு வாரங்களாக இடம் பெற்ற துப்பரவுப்பணிகள் நிறைவடைந்துள்ளன.
தமிழீத் தேசிய மாவீரர்நாள் அன்று மான்னார் மாவட்ட துயிலுமில்ல மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் குறித்த நேரத்திற்கு முன்னராக வருகை தருமாறு ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.