தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் மாவீரரின் நினைவிடத்தில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி!

0
412

யாழ்.வல்வெட்டித்துறை உடுப்பிட்டி வீதியில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் மாவீரர் சங்கரின் நினைவிடத்தில் பொதுமக்கள் இணைந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.குறித்த அஞ்சலி நிகழ்வுகள் இன்றைய தினம்(21) மாலை இடம்பெற்றுள்ளது.

தமிழீழ விடுதலைபுலிகள் அமைப்பில் இணைந்து தேசத்தின் விடுதலைக்காக போராடி உயிரிழந்த முதல் மாவீரர் சங்கரின் நினைவிடத்தில் முதல் பெண் மாவீரர் மாலதி மற்றும் மாவீரர் பண்டிதர் ஆகியோருடைய உருவப்படங்கள் வைத்து மிகவும் உணர்வுப்பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.இதேவேளை, இன்றைய தினம் தமிழர்களின் உரிமைக்காக, தமிழீழ இலட்சியத்துக்காகப் போராடி வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் நினைவேந்தல் வார நிகழ்வுகள், தமிழர் தாயகமான வடக்கு கிழக்கிலும், தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியுள்ளன.

https://youtu.be/L6kc2EeiJ2s

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here