தமிழ்த் தேசிய மாவீரர் வாரம் இன்று தொடக்கம் ஆரம்பம்!

0
125

தமிழ்த் தேசிய மாவீரர் வாரம் இன்று 21 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இவ்வார த்தை அனுஷ்டிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் பொதுமக்கள் இறங்கியுள்ளனர். இந்த நினைவு நிகழ்வு துயிலுமில்லங்களில் நடை பெறவுள்ளதோடு பொது இடங்களி லும் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில் சாவகச்சேரி நக ரிலும் மாவீரர் தின நினைவு நிகழ் வுகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஆரம்ப நடவடிக்கையாக நேற் றைய தினம் சாவகச்சேரியை சேர் ந்த பிரதிநிதிகள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.

இந்த கலந்துரையாடலின் நிறை வில் மாவீரர் தினத்தை
த்தை அனுஷ்டிப்பதற்காக ஏற்பாட்டு குழு ஒன்று உருவாக்கப்பட்டது அந்த குழுவில் தமிழரசு கட்சியின் தென்மராட்சி இணைப்பாளர் க.அருந்தவபாலன், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் கேசவன் சயந்தன், சாவகச்சேரி வர்த்தக சங்க தலைவர் வே.சிறிபிரகாஸ், சாவச்சேரி பிரதேச சபை தவிசாளர் சி.துரைராஜா, சாவகச்சேரி நகர சபை முன்னால் உறுப்பினர் அ.பாலமயூரன்முன்னால் நகரசபை உறுப்பினர், கிசோர்
கைதடி பல நோக்கு கூட்டுறவுச்சங்க செயலர் கந்தசாமி, உள்ளிட்ட பலரும் குறித்த ஏற்பாட்டு குழுவில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குழு சாவகச்சேரி நகரில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here