வசந்தபுரத்தில் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் சிறீலங்கா புலனாய்வு அதிகாரிகள் இருவர் கைது !

0
194


யாழ்ப்பாணம், மணியந்தோட்டம், வசந்தபுரத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையின் புலனாய்வு அதிகாரிகள் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினரின் முகாமில் இருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்டவை என்று சந்தேகிக்கப்படும் துப்பாக்கி, முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பவை ஒரு சில தினங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்டினருந்த நிலையில் . இன்று சிறப்பு அதிரடிப் படையின் புலனாய்வு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here