மன்னாரில் கோரவிபத்து; ஒருவர் பலி!

0
413

மன்னார் முருங்கன் கட்டையடம்பன் பிரதேசத்தில் இன்று (19) செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் முந்தல் கொத்தாந்தீவு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என மடு பொலிஸார் தெரிவித்தனர்.
முந்தல் கொத்தாந்தீவு கொலனியைச் சேர்ந்த பாருக் முகம்மது தில்ஷான் (20) எனும் இளைஞனே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
நேற்று (18) இரவு தேங்காய் கொள்வனவு செய்வதற்காக கொத்தாந்தீவு கொலனி மற்றும் பெருக்குவற்றான் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இருவர் சிறிய ரக லொறியொன்றில் மன்னாரை நோக்கிச் சென்றுள்ளனர்.
 இதன்போது, குறித்த லொறி மன்னார் முருங்கன் கட்டையடம்பன் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாக, லொறி வீதியை விட்டு விலகி வீதியோரத்தில் இருந்த சிறிய கம்பத்துடனும், எதிரே வந்த டிப்பர் ஒன்றுடனும் மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்த லொறியில் பயணித்த இருவரும் உடனடியாக முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் லொறியின் சாரதியான கொத்தாந்தீவு கொலனியைச் சேர்ந்த இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும், லொறியில் பயணித்த மற்றைய நபர் தொடர்ந்தும் முருங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, விபத்தில் குறித்த சிறிய ரக லொறியின் முன் பக்கம் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், டிப்பர் வாகனத்துக்கும் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகன சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here