அதி வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதகுடன் மோதியதில் மோட்டார்சைக்கிளை ஓட்டிச்சென்ற இளைஞர் ஸ்தலத் திலே உயிரிழந்ததுடன் அவருடன் பயணித்த மற்றையவர் படுகாயம டைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காரைநகர் தோப்புக்காட்டை சேர்ந்த வேலுப்பிள்ளை சிவஞான வேல் (வயது 30) என்ற இளைஞனே பரிதாபமாக உயிரிழந்தது டன் அதே இடத்தை
சேர்ந்த சிவபாலசிங்கம் சிவராஜ் (வயது 29) என்ற இளைஞனே படுகாயமடைந்தவராவார்.
காரைநகரில் உள்ள முருகன் கோவில் திருவிழாவுக்காக அப்பகுதியில் குறித்த இளைஞர்கள் தண்ணீர் பந்தல் அமைத்திருந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் காலை 7.45 மணியளவில் தயிர்
வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் குறித்த இரு இளைஞர்களும் மிக வேகமாக சென்றுள்ளனர்.
அப்போது விளான் பகுதியில் இவர்கள் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிரே உள்ள மதகில் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற இளைஞன் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்ததுடன் அவருடன் பின்னால் இருந்து சென்ற மற்றைய இளைஞர் படுகாயமடைந்து நிலையில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் மரண விசார ணையை தீவக மரண விசாரணைஅதிகாரி நாகராசா தியாகராசா மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உற வினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.