பிரான்சில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டப்போட்டி!

0
603

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்திய முன்னாள் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டப்போட்டி 2017 நேற்று (03.09.2017) ஞாயிற்றுக்கிழமை பிரான்சு Chateau de vincennes பகுதியில் காலை 10 மணிக்கு சிறப்பாக இம்பெற்றது.

இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை 2001 ஆம் ஆண்டு திருகோணமலையில் வீரச்சாவடைந்த 2 ஆம் லெப்.ஆதவனின் சகோதரன் அவர்கள் ஏற்றிவைத்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து ஆரம்ப உரையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு.மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார். அவர்தனது உரையில், எமது மண்ணின் விடியலுக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை தவறாது நினைவு சுமந்து பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்திவருகின்றது. இவ்வாறே இன்று பிரிகேடியர் தமிழ்ச் செல்வனின் நினைசுமந்து இந்தப்போட்டிகள் இடம்பெற்றுவருகின்றன.
புலம்பெயர் தேசங்களில் பல சிரமங்களுக்கு மத்தியில் துடுப்பாட்ட அணிகளை உருவாக்கி குறித்த போட்டிகளில் தவறாது பங்குபற்றிவரும் அணிகள் பாராட்டத்தக்கது. குறித்த அணிகள் துடுப்பாட்டத்தினை மேற்கொள்ள பெரும்பாலான மைதானங்கள் சாதகமாக அமைவதில்லை. விரைவில் துடுப்பெடுத்தாட்டத்துக்கு பொருத்தமான மைதானங்களை எமது விளையாட்டுத்துறையினர் பெற்றுத்தருவார்கள் எனத் தெரிவித்த அவர் அனைத்து அணிகளுக்கும் நன்றிதெரிவித்தார்.   தொடர்ந்து போட்டிகள் விறுவிறுப்பாக இடம்பெற்றன.
14 துடுப்பெடுத்தாட்ட அணிகள் இப்போட்டியில் கலந்துகொண்டன.
1ஆம் இடம் :அரியாலை ஐக்கிய கழகம்
2ஆம் இடம் :ஸ்கந்தா விளையாட்டுக் கழகம்
3ஆம் இடம் :ஏர்கன் விளையாட்டுக் கழகம்
சிறந்த துடுப்பாட்ட வீரன் – சபிந்தன் (அரியாலை ஐக்கிய கழகம்)
சிறந்த பந்து வீச்சாளன் – குட்டி (அரியாலை ஐக்கிய கழகம்)
சிறந்த தொடராட்ட வீரன் – அன்பு (ஏர்கன் விளையாட்டுக் கழகம்)
இறுதியாட்ட நாயகன் – சபிந்தன் (அரியாலை ஐக்கிய கழகம்)
(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here