ஏ9 வீதியில் விபத்து: ஒருவர் பலி; நால்வர் காயம்!

0
165

வவுனியா, ஏ9 வீதி களுகன்னாமடுவில் நேற்று (30) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானதுடன், நால்வர் படுகாயமடைந்தனர்.

கொச்சிக்கடையிலிருந்து கிளிநொச்சி நோக்கி ஓடுகளை ஏற்றிவந்த பாரவூர்தி, களுகன்னாமடுவில் திடீரென நிறுத்தப்பட்டது. இந் நிலையில் அனுராதபுரத்திலிருந்து வவுனியா நோக்கி வந்த கென்டர் ரக வாகனம், பாரவூர்தியின் மேல் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் ஒருவர் பலியானதுடன் நான்கு பேர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்விபத்து தொடர்பாக, கென்டர் ரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வவுனியா இரட்டை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here