உயிரிழந்த 6 மாணவர்களின் மரணத்திற்கு காரணம் வெளியாகியுள்ளது!

0
204

யாழ். கடலேரியில் மண்டைதீவை அண்டிய சிறுத்தீவு பகுதியில் 6 பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி பலியானமைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.
படகு கடலில் மூழ்கிய போது ஏழு மாணவர்களும் மதுபோதையில் இருந்ததாகவும் படகு பாதுகாப்பு தரங்களைக் கொண்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் தரப் பரீட்சைகளை நிறைவுசெய்த பின்னர் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக படகுப் பயணமொன்றை மேற்கொண்ட போதே இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.
கடலில் மூழ்கிய ஏழு மாணவர்களில் ஆறு பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் நீந்திக் கரைசேர்ந்துள்ளார்.


நீந்திக் கரைசேர்ந்த மாணவன் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஏனைய 6 மாணவர்களும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
கரையொதுங்கிய மாணவன் யாழ்ப்பாணம் குருநகர் மீனவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து யாழ்ப்பாணம் குருநகர் மீனவர்களால் மண்டைதீவு கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

எனினும் சம்பவ இடத்திற்கு கடற்படையினர் வருகை தருவதற்கு முன்னதாகஇ யாழ்ப்பாணம் குருநகர் மீனவர்கள் மிகுந்த போராட்டத்தின் மத்தியில்இ பாதுகாப்பு அங்கிகள் இல்லாத நிலையில்இ 4 மாணவர்களை சடலங்களாக மீட்டனர்.
அதனைத்தொடர்ந்து ஏனைய இரு சடலங்களும் கடற்படையினரால் மீட்கப்பட்டது.
இதில் மூன்று மணி நேர தேடுதலின் பின்னர் ஆறாவது இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது.
யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களான சின்னத்தம்பி நாகசுலோசன்இ லிங்கநாதன் ரஜீவ் மற்றும் ஜெயசாந்த் தினேஸ், யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் தேவகுமார் தனுரதன், யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலய மாணவன் கோணேஸ்வரன் பிரவீன் மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவன் தனுஷன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
நண்பன் ஒருவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, 18 மாணவர்கள் யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்கரைக்கு சென்றதுடன், இதில் 7 பேர் பயணம் செய்த படகே விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

உயிரிழந்த ஆறு மாணவர்களினதும் சடலங்கள் யாழ் போதானா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
6 சடலங்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு ஒப்படைக்கப்பட்டிருப்பதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கடற்படையினருடன் இணைந்து ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து ஏனைய 12 பேரும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் உயிரிழந்த 6 பேரின் உறவினர்களிடமும் பொலிஸாரால் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.
இந்நிலையில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகள் தொடர்பில் பொலிசாருடன் ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here