முகமாலையில் மர்மப்பொருள் வெடித்ததில் இருவர் காயம்!  

0
170

முகாமாலை பகுதியில் மர்மப்பொருள் வெடித்ததில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிற்கு அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களில் ஒன்றான இந்திராபுரம் கிராமத்தில் இன்று மாலை குறித்த வெடி விபத்து இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி பளை இந்திராபுரம் எனும்  புதிதாக மீள் குடியேற்றம் செய்த கிராமத்தில் குப்பைக்கு தீ வைத்தபோது குப்பைக்குள் இருந்த மர்மப்பொருள் வெடித்ததில் இருவரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரையும் முச்சக்கர வண்டியில் ஏற்றி  பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அங்கு நோயாளர் காவு வண்டி இல்லாததன் காரணமாக  மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பிரிவின் வாகனத்தில் ஏற்றி யாழ்ப்பாணம், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here