நல்லையம்பதியில் சிறப்புப்பெற்ற சப்பரத் திருவிழா(காணொளி)!

0
371

வட தமிழ் ஈழத்தின்  நல்லையம்பதி மகோற்சவ பெருவிழாவில் இன்று சப்பரத் திருவிழா கொண்டாடப்பட்டது.
வீதி உலாவரும் கோபுரக் கோயிலான சப்பரத்திலே எம்பெருமான் வள்ளிநாச்சி, தெய்வானை அம்பாள் சமேதராய் வலம் வந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்களுக்கு அருளாசி புரிந்தார்.
22 நாட்கள் விசேட பூசை வழிபாடுகளுடன் இடம்பெற்று வந்த நல்லூரானின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 23 ஆம் நாளாகிய இன்று சப்பரத் திருவிழா இடம்பெற்றது.
அழகால் அலங்காரக் கந்தன் என்றும் இளமையால் குமரன் என்றும் அழைக்கப்படும் நல்லூர்க் கந்தன் வள்ளி தெய்வானை சமேதராய், பழமை வாய்ந்ததும் மிக உயரமானதுமான அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், மங்கள வாத்தியங்கள் முழங்க வீதியுலா வந்தார்.
கண்டம் கடந்து சர்வதேச நாடுகளில் வாழும் தாயக மக்கள், சொந்த மண் திரும்பி குடும்ப விழாவாக கொண்டாடும் நல்லைக் கந்தனின் மகோற்சவத்தின் சப்பரத் திருவிழாவில் இன்றைய தினமும் கலந்துகொண்டனர்.
நாள் ஒரு அழகு பெரும் நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தில் நாளை இரதோற்சவத் திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/v0-BkrdYWM0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here