யாழ். குருநகர் கடற்பரப்பில் மின்னல் தாக்கியதில் இளம்குடும்பஸ்தர் பலி!

0
259

யாழ். குருநகர் முகத்துவார கடற்பரப்பில் இறால் பிடிக்க சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் மின்னல் தாக்கத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

குருநகர் புதிய கடற்கரை வீதியை சேர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான பிறான்சிஸ் றொபொன்சன் (வயது 28) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார்.

இவர் குருநகர் முகத்துவார கட ற்கரைக்கு இறால் பிடிப்பதற்காக மேலும் இரண்டு நபர்க
ளுடன் நேற்றைய தினம் அதிகாலை சென்றுள்ளார். கடலிலே 2 கிலோமீற்றர் தூரம் சென்ற போது காலை 5.30 மணியள வில் பெரிய சத்தத்துடன் மின்னல் ஒன்று அவர்களுக்கு அருகில் விழுந்துள்ளது.

மூன்று பேரும் கடலுக்குள் குப்புற விழுந்துள்ளனர். சிறிது நேரம் கழித்து ஏனைய இரண்டு பேரும் எழுந்து பார்த்த போது மேற்குறித்த நபர் தண்ணீருக்குள்ளேயே கிடந்துள்ளார்.

இதனை அவதானித்த ஏனைய மீனவர் கள் இருவரும் அவரை தூக்கிய போது கால்களில் எரிகாயங்கள் இருந்ததை அவதானித் துள்ளனர்.
உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கெனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்மரணம் தொடர்பான மரண விசார ணையை யாழ்.போதனாவைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவா யம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள் ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here