யாழ். துன்னாலை பகுதியில் மூன்றாவது நாளாக நேற்று சோதனை:18 பேர் கைது !

0
171

யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் மூன்றாவது நாளாகவும் நேற்று சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
நேற்று காலை 5 மணிமுதல் சுமார் மூன்று மணித்தியாலங்கள் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதன்போது சந்தேகத்தின் பேரில் 18 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய ஒருவரும் அடங்குகின்றனர்.
மேலும் தடை செய்யப்பட்ட கூரிய ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்கேத்திற்கிடமான முறையில் செயற்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் சந்தேகத்தின் பேரில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நெல்லியடி மற்றும் பருத்தித்துறை பொலிஸாருடன் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து இந்த சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
துன்னாலையில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து பொலிஸ் காவலரண் தாக்கப்பட்டமை மற்றும் டயர்கள் எரிக்கப்பட்டதை கருத்திற்கொண்டு பொலிஸ் விசேட அதிரடி படையினரால் சுற்றுவளைப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here