வட­ம­ராட்­சியில் 2 ஆவது நாளா­கவும் சுற்­றி­வ­ளைப்பு:10 பேர் கைது!

0
229

Sri Lankan police officers gather following a shootout on the outskirts of Colombo, Sri Lanka, Saturday, Oct. 8, 2011. A police official said former lawmaker Bharatha Lakshman Premachandra and two of his supporters were killed Saturday in an intraparty shootout during local council elections. (AP Photo/ Eranga Jayawardena)
யாழ்ப்­பாணம், வட­ம­ராட்சி பகு­தியில் சிறப்பு அதி­ரடிப் படை­யி­னரும் பொலி­ஸாரும் இணைந்து நேற்று இரண்­டா­வது நாளாக முன்­னெ­டுத்த 5 மணிநேர விசேட சுற்­றி­வ­ளைப்பில் 10 சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளரின் அலு­வ­லகம் தெரி­வித்­தது.  
ஏற்­க­னவே நேற்று முன் தினம் முன்­னெ­டுக்­கப்­பட்ட 5 மணி நேர
சுற்­றி­வ­ளைப்பில் மூவர் கைது செய்­யப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே, நேற்று 10 பேர் கைது செய்­யப்­பட்­ட­தாக அந்த அலு­வ­லகம் சுட்­டிக்­காட்­டி­யது.
இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் கடந்த ஜூலை 9 ஆம் 10 ஆம் திக­தி­களில் பருத்தித் துறை மணல்­காடு பகு­தியில் மணல் லொறி மீது நடத்­தப்­பட்ட துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்தில் இளைஞர் ஒருவர் கொல்­லப்­பட்­ட­தை­ய­டுத்து அப்­ப­கு­தியில் அமை­திக்கு பங்கம் ஏற்­ப­டுத்தும் வண்ணம் செயற்­பட்­ட­வர்கள் உள்­ள­டங்­கு­கின்­றனர்.
அத்­துடன் ஜூலை 21 ஆம் திகதி மணல்­காடு பகு­தியில் கட­லோர பாது­காப்புப் பிரி­வினர் மீது தாக்­குதல் நடத்­தி­ய­வர்­களும் உள்­ள­டங்­கு­வ­தா­கவும் சுற்­றி­வ­ளைப்பை நெறிப்­ப­டுத்­திய உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். அத்­துடன் சட்­ட­வி­ரோத மாட­றுப்பு நிலையம் ஒன்றும் நேற்று இந்த சுற்றி வளைப்பின் போது சிக்­கி­ய­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார்.
 வட­மா­காண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்­ணான்­டோவின் உத்­த­ர­வுக்கு அமைய நேற்று அதி­காலை 4.00 மணி முதல் முற்­பகல் 9.00 மணி­வரை யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்­ணான்டோ, பருத்தித் துறை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் மாசிங்க ஆகி­யோரின் நேரடி கட்­டுப்­பாட்டில் வட­ம­ராட்சி, துன்­னாலை கிழக்கு பகு­தியில் இந்த சுற்­றி­வ­ளைப்பு இடம்­பெற்­றது.
குட­வத்தை வேம்­படி மற்றும் துன்­னாலை பகு­திகள் முற்­றாக பொலிஸ் சுற்­றி­வ­ளைப்பு நேற்று உள்­ளா­கின. இதன் போது 52 பொலிஸ் மற்ரும் பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யினர் ஆயுதம் தாங்கி சுற்­றி­வ­ளைப்பை முன்­னெ­டுத்­த­துடன் மேலும் சில குழு­வினர் அவ­சியம் ஏற்­படும் போது அப்­ப­கு­தியை சுற்­றி­வ­ளைக்க தயார் நிலையில் வைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.
இதன்­போதே 10 சந்­தேக நபர்­களைக் கைது செய்த பொலிஸார் மோட்டார் சைக்­கிள்கள் இரண்­டையும் கைப்­பற்­றினர். கைதா­ன­வர்­களில் பெரும்­பா­லானோர் கடந்த ஜூலை 9 ஆம் திகதி பருத்­தித்­துறை மணல் காட்டில் இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூட்டை அடுத்து பொலி­ஸாரின் கட­மை­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்தும் வண்னம் செயற்­பட்­ட­வர்கள் எனவும் அவர்கள் மறுநாள் பொலிஸ் காவ­லரண் ஒன்­றினை உடைத்து தீயிட்­டமை, வீதி­களில் ரயர்­களை எரித்து பொது அமை­திக்கு பங்கம் விளை­வித்­தமை தொடர்பில் தேடப்­பட்டு வந்­த­வர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­லகம் தெரி­வித்­தது.
அத்­துடன் பிர­தே­சத்தில் சட்ட விரோத மாட­றுப்பு நிலையம் ஒன்­றினை நடாத்­தி­வந்­தமை தொடர்­பிலும் சட்­ட­வி­ரோத இறைச்­சியை தம் வசம் வைத்­தி­ருந்­தமை தொடர்­பிலும் இரு­வ­ருக்கு எதி­ராக வழக்கும் தொட­ரப்­பட்­டுள்­ளது. குறித்த இரு­வரும் சுற்றி வளைப்பின் போது தப்பிச் சென்­றுள்ள நிலையில் பின்னர் அவர்­களை தேடிக் கண்­டு­பி­டித்து பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.கைதா­ன­வர்கள் இன்று பருத்தித் துறை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.
இத­னி­டையே யாழ்ப்­பாணம் வட­ம­ராச்சி பிர­தே­சத்தில் நேற்று முன் தினமும் பொலி­ஸாரும் ஸாரும் விஷேட அதிரடிப்படையினரும் இணைந்து நடாத்திய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளன. துன்னாலை தெற்கு பிரதேசத்தில் நேற்று முன் தினம் அதிகாலை 4.30 மணி முதல் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here