வடக்கில் பாரிய குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த தீய சக்­திகள் முயற்சி!

0
140

வடக்கில் ஆவா குழுவை முன்­னைய அர­சாங்­கத்தின் பாது­காப்­பு­து­றைசார் முக்­கி­யஸ்­தர்­களே உரு­வாக்­கினர். அந்த ஆவா குழுவே இன்றும் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­கி­றது. எவ்­வா­றெ­னினும் அர­சாங்கம் இந்த நிலை­மை­களை கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வரும் என்றும் அர­சாங்கம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.
அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய இணை அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளர்­க­ளான ராஜித சேனா­ரட்ன, தயா­சிறி ஜய­சே­கர ஆகியோர் இதனைத் தெரி­வித்­தனர்.
முதலில் அமைச்சர் ராஜித சேனா­ரட்ன குறிப்­பி­டு­கையில்;
வடக்கில் ஆவா குழுவை உரு­வாக்­கி­யது யார் என்று எங்­க­ளுக்கு நன்­றாகத் தெரியும். எங்­க­ளுக்கு மட்­டு­மல்ல அனை­வ­ருக்கும் தெரியும். கடந்த அர­சாங்­கத்தின் பாது­காப்பு முக்­கி­யஸ்­தர்­களே ஆவா குழுவை உரு­வாக்­கினர். அந்த அர­சாங்­கத்தில் நாங்­களும் இருந்தோம். அதனால் எங்­க­ளுக்கு எல்லாம் தெரியும். ஆவா குழுவை இயக்­கு­வது யார்? அத­னூ­டாக எதனை அடைய முயற்­சிக்­கின்­றனர் என்­பதும் எங்­க­ளுக்குத் தெரியும். அதற்கு காசு கொடுத்து இயக்க வைப்­பது யார் என்­பதும் எங்­க­ளுக்குத் தெரியும் என்றார்.
கேள்வி: வடக்கில் இரா­ணுவ முகாம்­களை அகற்­று­வதன் கார­ண­மா­கவா இவ்­வா­றான குழுக்கள் தலை­தூக்­கு­கின்­றன?
பதில்: (ராஜித) நீங்கள் ஒன்றைப் புரிந்­து­கொள்­ளுங்கள். வடக்கில் இரா­ணுவ முகாம்கள் இருந்த காலத்தில் தான் இந்தக் குழுக்கள் உரு­வாக்­கப்­பட்­டன. அந்தக் குழுக்­களை யார் உரு­வாக்­கி­யது, அதனை செயற்­ப­டுத்­தி­யது யார் என்று எங்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும் என்றார்.
அமைச்­ச­ரவை இணைப்­பேச்­சாளர் தயா­சிறி ஜய­சே­கர குறிப்­பி­டு­கையில்;
நல்­லாட்சி அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை குழப்­பு­வ­தற்கு ஒரு­சிலர் நட­வ­டிக்கை எடுக்­கின்­றமை நன்­றாகத் தெரி­கின்­றது. தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் மித­வாத அர­சி­யல்­த­லை­வர்கள் சிறந்த முறையில் செயற்­பட்டு வரு­கின்­றனர். அந்த நிலை­மையைக் குழப்பி சிக்­கலை ஏற்­ப­டுத்­தவே வடக்கில் நெருக்­க­டி­களை சில தரப்­பினர் ஏற்­ப­டுத்­து­கின்­றனர்.
தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் மித­வாத தலை­வர்கள் இருப்­ப­தைப்­போன்றே ஒரு­சில இன­வா­தி­களும் செயற்­பட்டு வரு­கின்­றனர். இந்­நி­லையில் இவ்­வாறு நல்­லி­ணக்க செயற்­பாட்டை நெருக்­க­டிக்­குட்­ப­டுத்­து­வ­தற்கு வடக்கில் ஒரு­சிலர் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­வதை நாம் ஆழ­மாக அறிந்­து­கொண்­டி­ருக்­கின்றோம்.
அதற்­கேற்ப நாங்கள் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்றோம். இவ்­வாறு தொடர்ந்து குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு நாங்கள் இட­ம­ளிக்­க­மாட்டோம். அர­சாங்கம் இது­தொ­டர்பில் மிகவும் ஆழ­மான முறையில் ஆராய்ந்து வரு­கி­றது என்றார்.
இந்த செய்­தி­யாளர் சந்­திப்பில் பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவான் குண­சே­கர குறிப்­பி­டு­கையில்:
யாழ்ப்­பா­ணத்தில் அண்­மையில் ஒரு­சில அசம்­பா­வி­தங்கள் இடம்­பெற்­றன. குறிப்­பாக நீதி­பதி மீதான துப்­பாக்­கிச்­சூட்டு சம்­ப­வத்தில் அர­சாங்கம் தேவை­யான விசா­ரணை நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது. அது தொடர்பில் விசா­ர­ணை­களும் இடம்­பெற்று வரு­கின்­றன . மூவர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர்.
அதே­போன்று பொலிஸார் மீதான வாள்­வெட்­டுத்­தாக்­குதல் சம்­ப­வத்தில் ஏழுபேர் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர். அவர்­களில் இருவர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். அவர்கள் இரு­வரும் ஆவா குழுவின் முன்னாள் உறுப்­பி­னர்கள் எனத் தெரி­ய­வந்­துள்­ளது. மேலும் ஐவ­ரையும் அடை­யாளம் கண்­டி­ருக்­கின்றோம் அவர்­களை கைது­செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.
கேள்வி: .அடை­யாளம் காணப்­பட்­டுள்ள ஐவரின் பெயர்­களை கூற முடி­யுமா?
பொலிஸ் பேச்­சாளர்: ஐவரை அடை­யாளம் கண்­டி­ருக்­கின்றோம். ஆனால் பெயர்­களை கூறு­வது விசாரணைகளுக்கு பாதகமாக அமையும்.
கேள்வி: அவர்கள் சிங்களவர்களா? தமிழர்களா?
பொலிஸ் பேச்சாளர்: அந்தப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். தமிழர்கள்.
கேள்வி: ஆவா குழு இன்னும் செயற்படுகின்றதா?
பொலிஸ் பேச்சாளர்: ஆவா குழு தற்போது செயற்படுகின்றதா என்பதை விட கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் முன்னாள் ஆவா குழுவின் உறுப்பினர்களாகவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். எப்படியிருப்பினும் அங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here