யாழ் கலட்டி சந்தி வாள்வெட்டில் இளைஞர் படுகாயம்!

0
185

யாழ். திருநெல்வேலி கலட்டி சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் புலோலி பகுதியைச் சேர்ந்த தி. சலோஜிதன் (18) எனும் இளைஞரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

கலட்டிப் பகுதியில் வேலைக்காக வந்த குறித்த இளைஞரை நேற்று (27) மாலை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் வாளால் வெட்டியுள்ளனர்.

வாள்வெட்டுக்கு இலக்காகிய இளைஞர் பொது மக்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here