பேருந்து பந்தாடியதில் முதியவர் சம்பவ இடத்தில் பலி!

0
150
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் புத்தூர் வங்கிக்கு அருகா மையில் முதிய வர் ஒருவரை பேரு ந்து மோதித் தள் ளியதில்  குறித்த நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்து ள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
புத்தூர் வங்கிக்கு அருகாமையில் உள்ள உணவகமொன்றில் தேநீர் அருந்தி விட்டு வீதியை வெள்ளைக் கோடு வழியே கடந்து மறுபக்கம் சென்ற முதியவரை யாழ்ப்பாணத் தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்து மோதித் தள்ளியதில் பிரஸ்தாப முதி யவர் 20 மீற்றர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந் துள்ளார்.
இச்சம்பவத்தில் சிவலை கிட்டிணன் (வயது73) என்ற முதியவரே உயிரிழந்துள் ளவராவார்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு உற வினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மரண விசாரணைகளை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here