உடுப்பிட்டியில் கழுத்தில் கத்தி வைத்து திருட்டு!

0
175

அதிகாலை வேளையில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் வயோதிபத் தம்பதியரின்  கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்திவிட்டு அங்கிருந்த 12 பவுண் நகையினையும் 4 ஆயிரம் ரூபாய் பணத் தினையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக வல்வெட்டித் துறை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை அதிகாலை 02.00 மணியளவில் உடுப்பிட்டி 15ஆம் கட் டைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் புகைப்  போக்கி வழியாக உள்நுழைந்த கொள்ளை யர்கள் அங்கிருந்த வயோதிப தம்பதியரின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி விட்டு அங்கிருந்த 12 பவுண் நகை, 4 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையடி த்ததுடன் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த மென்பானத்தை பருகியதுடன் தேநீர் தயா ரித்து குடித்துவிட்டு சென்றதாக வல்வெட்டி துறை பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை களை மேற்கொண்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here