பிரான்சு சார்சல் பகுதியில் சிறப்பாக இடம்பெற்ற தமிழ்ச்சோலை இல்ல விளையாட்டுப் போட்டிகள்!

0
1303

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம், தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியன இணைந்து நடாத்திய தமிழ்ச்சோலைப் பள்ளிகளுக்கிடையே யான இல்லமெய்வல்லுநர் போட்டியின் இறுதிப்போட்டிகள் நேற்று (01.07.2017) சனிக்கிழமை கடும் மழைக்கு மத்தியில் சார்சல் நெல்சன் மண்டேலா மைதானத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்தது.
தெரிவுப் போட்டிகள் கடந்த 24.06.2017 சனிக்கிழமை, 25.06.2017 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் சார்சல் நெல்சன் மண்டேலா மைதானத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
ஆரம்பதினமான 24.06.2017 சனிக்கிழமை ஈகைச்சுடரினை 02.08.1990 அன்று வீரச்சாவடைந்த மேஜர் சூட்டி அவர்களினதும் 30.04.1989 இந்திய இராணுவத்தினருடனான நேரடி மோதலில் வீரச்சாவடைந்த கப்டன் வரதப்பா அவர்களினதும் சகோதரன் ஏற்றிவைத்தார்.
இரண்டாம் நாளான 25.06.2017 ஞாயிற்றுக்கிழமை ஈகைச்சுடரினை 1997 காலப்பகுதியில் வீரச்சாவடைந்த 2ஆம் லெப்ரினன்ட் இளந்தேவன் அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்தார்.
இறுதிநாளான நேற்று (01.07.2017) சனிக்கிழமை சார்சல் நெல்சன் மண்டேலா மைதானப்பகுதியில் அமைந்துள்ள நினைவுத்தூபி முன்பாக காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற ஆரம்ப வணக்க நிகழ்வில் 1997 அன்று உயிலங்குளம் பகுதியில் வீரச்சாவடைந்த 2ஆம் லெப். இளந்தேவன் அவர்களின் சகோதரன் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர்.
பான்ட் தாளவாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்;து வரப்பட்டதைத் தொடர்ந்து பொதுச்சுடரினை சார்சல் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.டக்ளஸ் அவர்கள் ஏற்றிவைக்க பிரெஞ்சுக்கொடியை சார்சல் நகரபிதா பிரான்சுவா பொப்பினி அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியை பிரான்சு தமிழ்பெண்கள் அமைப்புப் பொறுப்பாளர் திருமதி சுகந்தினி சுபாஸ்கரன் அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச்சுடரினை 16.06.1991 அன்று வவுனியா பிரமணாளங்குளம் பகுதியில் வீரச்சாவடைந்த லெப்ரினன்ட் கபில் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து, தமிழ் சங்கங்களின் கூட்டமைப்புக்கொடியை அதன் பொறுப்பாளர் திரு.பாலக்குமாரன் அவர்களும் தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகக் கொடியை அதன் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களும் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து இ;ல்லப்பொறுப்பாளர்களால் இல்லக்கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டன.
ஒலிப்பிக் தீபத்தை மெய்வல்லுநர் போட்டி முகாமையாளர் திரு.இராஜலிங்கம் அவர்கள் மெய்வல்லுநர் போட்டித் தலைவன் பாலேந்திரன் பானுயன் மற்றும் மெய்வல்லுநர் தலைவி சோதிராசா சோபனாவிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து வீரர்கள், நடுவர்கள் சத்தியப்பிரமாணம் இடம்பெற்றதையடுத்து போட்டிகள் ஆரம்பமாகின.
சோதியா இல்லம், அங்கையற்கண்ணி இல்லம், ராதா இல்லம், மாலதி இல்லம், சார்ள்ஸ் இல்லம், ஜெயந்தன் இல்லம் ஆகிய இல்லங்களிடையே விளையாட்டுப் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றிருந்தன.
கொட்டும் மழைக்குமத்தியில் தமிழ்ச்சோலை இல்ல மாணவர்களின் அயராத முயற்சியாக அணிநடை இடம்பெற்றமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அணிவகுப்பு மரியாதையை வவுனியா பிரமணாளங்குளம் பகுதியில் வீரச்சாவடைந்த லெப்ரினன்ட் கபில் அவர்களின் சகோதரி, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு.மகேஸ், தமிழ்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமார், மெய்வல்லுநர் போட்டி துணைமுகாமையாளர் திரு.பீலிக்ஸ், சார்சல் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.டக்ளஸ், தமிழ் சங்கங்களின் கூட்டமைப்புப் பொறுப்பாளர் திரு.பாலக்குமாரன் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.
சிறப்பு நிகழ்வுகளாக விநோத உடைப்போட்டி, சிறுவர் விளையாட்டுக்கள், தமிழ்ச்சோலை பழைய மாணவர்களுக்கான விளையாட்டுக்கள், பார்வையாளர்களுக்கான விளையாட்டுக்கள் என அனைத்துநிகழ்வுகளும் சிறப்பாக அமைந்திருந்தன. விநோத உடைப்போட்டிகளில் மாணவர்கள் திறம்பட கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இல்லங்களின் அலங்கரிப்பும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. இல்லவடிவமைப்பில் முதலிடத்தை மாலதி இல்லமும் இரண்டாமிடத்தை சார்ள்ஸ் இல்லமும் மூன்றாமிடத்தை சோதியா இல்லமும் பெற்றுக்கொண்டன.
முடிவில் 550 புள்ளிகளைப்பெற்று சாள்ஸ் இல்லம் முதலிடத்தையும் 444 புள்ளிகளைப் பெற்று ராதா இல்லம் இரண்டாமிடத்தையும் 321.5 புள்ளிகளைப்பெற்று மாலதி இல்லம் மூன்றாம் இடத்தையும் தமதாக்கிக்கொண்டன.
நிகழ்வுகளை திரு.குருபரன் , திரு.பத்மரூபன் ஆகியோர் திறம்பட தமது அறிவிப்புக்களின் ஊடாகக் கொண்டுசென்றதைக் காணமுடிந்தது. நிறைவாக வெற்றிபெற்றவர்களுக்கான மற்றும் இல்லங்களுக்கான பரிசளிப்பு இடம்பெற்றது.
பரிசளிப்பு நிகழ்வில் சார்சல் நகரபிதா பிரான்சுவா பொப்பினி அவர்களும் கலந்துகொண்டு நினைவுக் கிண்ணத்தினையும் பதக்கங்களையும் வழங்கி மதிப்பளிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் ஆற்றல்கள் குறித்த சிறப்புரைகளும் இடம்பெற்றிருந்தன.
கொடிகள் இறக்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.
(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here