மூன்று வருட காலத்தினுள் 3 வது தடவையாக ஆசனத்தை மாற்றிய அவைத்தலைவர்!

0
155


வடமாகாண அவைத்தலைவருக்கான புதிய ஆசனத்தின் பெறுமதி 90 ஆயிரம் ரூபாய் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் அவைத்தலைவராக அவையில் கடந்த 14ஆம் திகதி அமர்வில், பண்டைய கால அரசர்களின் சிம்மாசனத்தை ஒத்த வடிவமைப்பை கொண்ட ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.
குறித்த ஆசனத்தின் பெறுமதி, 90 ஆயிரம் ரூபாய் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு கடந்த மூன்று வருட காலத்தினுள், அவைத்தலைவர் தனது ஆசனத்தை மூன்றாவது தடவையாக மாற்றியுள்ளார்.
மாகாண சபை நிதி வீண்விரயம் ஆக்கப்படுவதாக பல தடவைகள் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் சபை அமர்வுகளில் சுட்டிக்காட்டிப் பேசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here