பருத்தித்துறை தும்பளை விபத்தில் ஒருவர் பலி மூவர் காயம் !

0
406

நேற்று முன்தினம் (10) இரவு 9 மணியளவில் பருத்தித்துறை தும்பளை மணியகாரன் சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அன்னலிங்கம் புஸ்பகரன் (வயது-36) என்பவர் உயிரிழந்தார். மற்றும் அன்ரன் சந்திரகுமார், துரைசிங்கம் பாலகுமார் (வயது-25), அருமைத்துரை கருணாகரன் (வயது-43) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இறந்த மற்றும் காயமடைந்த அனைவரும் தும்பளை கிழக்கு பருத்தித்துறையைச் சேர்ந்தவர்களாவர்.
நிதானமின்றி சாரதியால் செலுத்திச் சென்றதாகக் கூறப்படும் இவர்களின் வாகனம் மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இதில் கடுமையாக படுகாயமடைந்தவரே பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்ட நிலையில் மரணமடைந்தவராவார்.
காயமடைந்த மூவரில் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப் பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here