வடமராட்சி மருதங்கேனி பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த 88 நாட்களாக காணாமல் போன தம்முடைய உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இதுவரையில் தமது பிள்ளைகளுக்கான எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை என காணாமல் போனோரின் உறவினர் தெரிவித்துள்ளனர்.