பிரிட்டனில் தொங்கு பாராளுமன்றம் அமையும் நிலை!

0
136

பிரிட்டிஷ் பாராளுமன்றத் தேர்தலில் இரு பிரதான கட்சிகளும் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெறாததால் தொங்கு பாராளுமன்றம் அமையும் நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தமாக உள்ள 650 ஆசனங்களில் ஆட்சியமைப்பதற்கு 326 ஆசனங்களைப் பெற வேண்டும்.

இந்நிலையில் ஆளும் கட்சியான பிரதமர் தெரேஸா மேயின் கன்சர்வேட்டிவ் கட்சி 318 ஆசனங்களையும், பிரதான எதிர்க்கட்சியான தொழில்கட்சி 261 ஆசனங்களையும் வென்றுள்ளது. இதனால் இரு கட்சிகளும் உதிரிக் கட்சிகளை இணைத்தே ஆட்சியமைக்க வேண்டியுள்ளது.

தேர்தல் முடிவுகளின்படி, கன்சர்வேடிவ் கட்சி கடந்த தேர்தலை விட 13 தொகுதிகளை இழந்து 318 இடங்களையும், தொழிலாளர் கட்சி கடந்த தேர்தலை விட 29 தொகுதிகளை வென்று 261 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. லிபரல் கட்சி கடந்த தேர்தலை விட 5 தொகுதிகளை வென்று 18 இடங்களை கைப்பற்றியுள்ளது.

ஸ்கொடிஷ் தேசிய கட்சி கடந்த தேர்தலை விட 21 தொகுதிகளை இழந்து 35 இடங்களை பெற்றுள்ளது. தொங்கு பாராளுமன்றம் அமைவது உறுதியாகிவிட்ட நிலையில் இங்கிலாந்து மஹாராணியை சந்திக்க தெரசா மே முடிவு செய்துள்ளார். கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில் தெரசா மே இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை பலம் தேவை. எனவே முன் கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் தெரசா முன்மொழிந்தார்.

அதற்கு பாராளுமன்றமும் ஒப்புதல் அளித்தது. பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தேர்தலை எதிர்கொண்ட தெரசா மே தற்போது பெரும்பான்மையை இழந்து நிற்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தெரசா மே-வில் கன்சர்வேடிவ் கட்சிக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இப்போது இருக்கின்றன.

ஒன்று, வேறு ஒரு கட்சியின் ஆதரவைப் பெற்று கூட்டணி ஆட்சியை அவர் அமைக்க வேண்டும். இல்லையேல் தொழிலாளர் கட்சியின் ஜெரமி கார்பினின் சிறுபான்மை அரசுக்கு வழிவிட வேண்டும். ஸ்காட்லாந்து தேசிய கட்சி 35 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒருவேளை இக்கட்சியின் ஆதரவை தெரசா மே பெற்றால் பிரிட்டனில் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பிருக்கிறது.

எதற்காக தேர்தல் நடத்தப்பட்டது?

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகியவை உள்ளடங்கிய பிரிட்டிஷ் பாராளுமன்றத்துக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது.

கடந்த 2015 மே மாதம் நடந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்று டேவிட் கேமரூன் பிரதமராகப் பொறுப் பேற்றார். பிரெக்ஸிட் விவகாரம் காரணமாக அவர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2016 ஜூலை 13-ல் தெரசா மே பிரதமராகப் பதவியேற்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை பலம் தேவை. எனவே முன் கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் தெரசா முன்மொழிந்தார். அதற்கு பாராளுமன்றமும் ஒப்புதல் அளித்தது.

ஏற்கெனவே அறிவித்தபடி 650 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்துக்கு நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 4.6 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்களில் இந்திய வம்சாவளியினர் 15 லட்சம் பேர் உள்ளனர்.

ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் தெரசா மே பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டார். எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி சார்பில் அதன் தலைவர் ஜெரமி கார்பின் பிரதமர் வேட்பாளராக களமிறங்கினார்.

இந்திய நேரப்படி நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு வரை விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்றது. நேற்று அதிகாலை முதல் முடிவுகள் வெளியிடப்பட்டன.

தேர்தல் முடிவு நிலவரம்:

மொத்தம் 650 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் 650 இடங்களுக்குமான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஜெர்மி கார்பைனின் தொழிலாளர் கட்சி 261 இடங்களையும் பிரதமர் தெரசா மே-வின் கன்சர்வேடிவ் கட்சி 318 இடங்களை கைப்பற்றியிருக்கிறது. அடுத்தபடியாக ஸ்காட்டிஷ் நேஷனல் கட்சி 35 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

தலைநகர் லண்டன் மற்றும் மான்செஸ்டரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களும், இந்தத் தேர்தலில், ஆளும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருத்துக் கணிப்பு முடிவுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here