வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு – வாள்வெட்டு குழு தேவா, பிர­காஸ் திருச்­சி­யில் கைது !

0
275


வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சின்னக்குளத்தில் வசித்த 40 வயதுடைய முத்துலிங்கம் கனகராஜா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே செட்டிகுளம் சண்முகபுரம் கிராமத்தில் வீதியோரத்தில் இருந்து வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் 5 மணிக்கு வவுனியா நகர்பகுதிக்கு சென்றதாக கூறி பேருந்தில் சென்ற இவர் இரவு சுமார் 9 மணியளவில் தனது மனைவிக்கு தொலைபேசியில் அழைத்து தனது கடையின் முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனது முச்சக்கர வண்டியை எடுத்து விடும்படியும் தான் வீட்டுக்கு வந்துகொண்டிருப்பதாகவும் கூறி தொலைபேசி அழைப்பைத் துண்டித்துள்ளார்.
நீண்டநேரமாகியும் தனது கணவன் வீட்டுக்கு வராத காரணத்தினால் இரவு 10 மணியளவில் தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்டபோது தொலைபேசி இயங்கவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று காலை செட்டிகுளம் – பூவரசங்குளம் வீதியில் உள்ள சண்முகபுரம் கிராமத்தில் சென்றவர்கள் வீதியோரத்தில் சடலம் கிடப்பதை கண்டு செட்டிகுளம் காவல்துறைக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
இதேவேளை யாழ்ப்­பா­ணத்­தில் வாள்­வெட்­டுக் கும்­பலை இயக்கி வரு­ப­வர்­கள் என்­றும், பலரை வெட்­டிச் சரித்­தார்­கள் என்ற குற்­றச்­சாட்­டி­லும் பொலி­ஸா­ரால் நீண்­ட­கா­ல­மா­கத் தேடப்­பட்டு வந்த தேவா, பிர­காஸ் ஆகிய இரு­வர் தமி­ழ­கம் திருச்­சி­யில் வைத்து இந்­திய கியூப் பிரி­வுப் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­ட­னர்.
அவர்­கள் இரு­வ­ரும் உரிய ஆவ­ணங்­க­ளின்றி தமி­ழ­கத்­தில் தங்­கி­யி­ருந்­த­னர் என்ற குற்­றச்­சாட்­டி­லேயே கியூ பிரி­வினரால் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­களை தமி­ழ­கத்­துக்கு அழைத்து வந்­தார் என்ற குற்­றச்­சாட்­டில் டானி­யல் என்ப­வ­ரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.
“கும்­ப­லின் தலை­வர் எனத் தெரி­விக்­கப்­ப­டும் பிர­சன்னா (சன்னா) என்­ப­வர் வெளி­நாட்­டுக்­குத் தப்­பிச் சென்­றுள்­ளார். ஏனை­ய­வர்­கள் இலங்­கை­யில் ஏதோ ஒரு இடத்­தில் தலை­ம­றை­வாகி உள்­ளார்­கள்” என்று அண்­மை­யில் சிறீலங்கா காவல்துறையினர் தெரி­வித்­தி­ருந்­த­னர்.
கைது செய்­யப்­பட்ட­ இரு­வ­ரும், தாம் இலங்­கை­யில் “இன்­பம் துன்­பம்” என்ற குழு­வில் அங்­கத்­த­வர்­க­ளாக இருப்­ப­தாக­ தெரி­வித்­துள்­ள­னர். எனி­னும் அவர்­கள் இரு­வ­ரும் ஆவாக் குழு­வைச் சேர்ந்­த­வர்­கள்­தான் என்று சிறீலங்கா காவல்துறையினர் தெரி­விக்­கின்­ற­னர்.
வெளி­நாடு ஒன்­றுக்கு தப்­பிக்­கும் நோக்­கி­லேயே அவர்­கள் இரு­வ­ரும் திருச்­சி­யில் தங்­கி­யி­ருந்­த­னர் என்று தெரி­வித்த தமிழக காவல்துறையினர் , இரு­வ­ரி­ட­மும் விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­க­வும் குறிப்­பிட்­ட­னர்.
இதே­வேளை, தேவா, பிர­காஸ் ஆகி­யோர் கைது செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து இலங்­கை­யி­லி­ருக்­கும் அவர்­க­ளது கும்­ப­லைச் சேர்ந்­தோர் சமூ­க­வ­லைத் தளங்­க­ளில் பல்­வேறு கருத்­துக்­க­ளைப் பதிவு செய்து வரு­கின்­ற­னர். சிலர் தமது முக­நூல் பக்­கங்­க­ளின் படங்­களை கறுப்­பாக மாற்­றி­யுள்­ள­னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here