2009ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட இறுதி யுத்தத்தின் கொடூரத்தில் தமது உயிர்களைத் தியா கம் செய்தவர்களின் நினைவாக நாளை வியாழக்கிழமை முள்ளிவாய்க்கால் பூமியில் உணர் வெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது .
வடமாகாண சபையின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நினைவேந்தல் நிகழ்விற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமை தாங்கவுள்ளார்.
இந்நிகழ்வானது நாளை காலை 9.30 மணியவில் மூன்று நிமிட மௌன அஞ்சலியுடன் ஆரம்ப மாக அதனைத்தொடர்ந்து மரணித்த ஆன்மாக்களுக்காக பிரார்த்தனையும் ஈகைச்சுடரும் ஏற்றப் படவுள்ளன. அதனைத்தொடர்ந்து வடமாகாண முதலமைச்சர் நினைவேந்தல் உரையை ஆற்ற வுள்ளார்.
முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து எட்டு ஆண்டுகள் கடக்கின்ற நிலையில் நடைபெறவுள்ள இந்த நினைவேந்தல் இம்முறை ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்கவுள்ளனர்.
பொதுமக்கள் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வலயத்திற்கு வருகை தருவதற்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள் ளதாக நினைவேந்தல் நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுவின் உறுப்பினரும் வடமாகாண சபை உறுப்பி னருமான து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது நினைவேந்தல் வலயத்தை சிரமதானம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு நினைவேந்தலுக்கான அடுத்த கட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. அத்துடன் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள அனைத்து உறவுகளும் உயிர் நீத்த ஆன்மாக்களுக்கான தமது அஞ்சலியை செலுத்துவதற்காக அணிதிரளுமாறு ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் பிறிதொரு நினைவேந்தல் நிகழ்வும் வடக்கிலும் கிழக்கிலும்நடைபெறவுள்ளது. வடக்கு மாகாணத்தில் ஏ32வீதியில் புதுக்குடியிருப்பு 46ஆம் மைல்கல்லை அண்மித்து புனித சின்னப்பர் ஆலய வீதியுடாக சென்றடையும் கற்கரையில் பிற்பகல் 2.30இற்கு இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நினைவேந்தல் நிகழ்வானது அக்கட் சியிக் முல்லை மாவட்ட செயலாளர் சிந்துஜன் தலைமையில் நடைபெறவுள்ளது.
மேலும் கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் வாகரையில் காலை 9.30இற்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதனை விடவும் வடக்கு கிழக்கில் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் பல்வேறுபட்ட தரப்பினராலும் அனுஷ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.