பிரான்சு பாரிசில் பயங்கரவாதத் தாக்குதல்: காவல்துறை அதிகாரி மற்றும் துப்பாக்கிதாரி பலி!

0
643

பிரான்சு பாரிசில் இன்று இரவு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பிரான்ஸ் 2 பத்திரிகையாளரின் தகவலின் படி, சம்பவம் இரவு 21 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பாரிஸின் முக்கிய பகுதியான Champs-Elysées பகுதியில் அதிக வேகத்தில் பயணம் செய்த ஒரு மகிழுந்து, பிரெஞ்சு காவல்துறையினரின் வாகனத்தின் அருகே நிறுத்தப்பட்டது.

மகிழுந்தில் இருந்து இறங்கிய பயங்கரவாதி  காவல்துறையினரை நோக்கி  “கனரக ஆயுதத்தால் துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறை தலைமையகத்தின் தகவல் படி, காவல்துறை அதிகாரி ஒருவர் இறந்துள்ளதுடன், மற்றொரு காவல்துறையினர் காயமடைந்தார்.

உள்துறை அமைச்சகத் தகவலின் படி தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதி காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.
இச்சம்பவத்தை அடுத்து பாரிசின் முக்கிய பகுதிகள் எங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here