பிரான்சில் ஜனாதிபதி தேர்தலின் போது பயங்கரவாத தாக்குதல் திட்டம்! – இரு பயங்கரவாதிகள் கைது!

0
140

பிரான்சில் எதிர்வரும் 23.04.2017 ஞாயிற்றுக் கிழமை மற்றும் 07.05.2017 ஞாயிற்றுக் கிழமை இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலின் போது, பெரும் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள இருந்த இரு பயங்கரவாதிகள் பிரான்சு பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெடிப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.
23 மற்றும் 29 வயதுடைய இரு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (18.04.2017) RAiD மற்றும் DGSI படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் மேற்படி இரு பயங்கரவாதிகள் மார்செய்யில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக பிரான்சு உள்துறை அமைச்சர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட இரு பயங்கரவாதிகளும் காவல்துறையினரால் முன்னரே நன்கு அறியப்பட்டவர்கள் எனவும், இருவரும் தீவிர மதவாத கொள்கைகள் கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, இந்த விசாரணைகள் இரு வாரங்களுக்கு முன்னதாகவே பாரிசு RAiD மற்றும் DGSI படையினரால் ஆரம்பிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்செய்யில் 3 ஆம் வட்டாரத்தில் இந்த தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் வைத்து பயங்கரவாதிகளும், வெடிப்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. கட்டிடத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து, ‘இது ஒரு மிககுறிப்பிடத்தக்க நடவடிக்கை!’ என பயங்கரவாத தடுப்புப் பிரிவினரை பாராட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here