உணவு நஞ்சானதில் மூவர் மரணம் : 500 பேர் வைத்தியசாலையில்.!

0
135

உணவு ஒவ்வாமை காரணமாக, அம்பாறை இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 500 இற்கும் அதிகமான மக்கள் சுகவீனமுற்ற நிலையில் இறக்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (06) பிற்பகல் இடம்பெற்ற குறித்த கந்தூரி வைபத்தின்போது, ஆரம்பத்தில் சமைக்கப்பட்ட உணவை உட்கொண்ட குறித்த பிரதேச (வாங்காமம்) மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அதன் பின்னர் சமைத்த உணவே இவ்வாறு நஞ்சாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன் நிகழ்வில் 2000 இற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த உணவுகளைத் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்து, சுகாதார மருத்துவ அதிகாரிகளால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, பயன் படுத்தப்பட்ட பொருட்களில் எவ்வித காலாவதியான பொருட்களும் காணப்படவில்லை என ஆரம்பக்கட்ட பரிசோதனைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் வயதானவர்களும், சிறுவர்களுமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here