சுகாதார பிரச்சினை காரணமாக கட்டார் மக்களை சிறீலங்காவுக்கு பயணிக்க வேண்டாம் என கட்டார் வெளிவிவகார அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தங்கள் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர்கள் தங்கள் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
சிறீலங்காவில் புகழ்மிக்க சுற்றுலா தளங்களாக கண்டி உட்பட மலையகத்தில் வேகமாக பரவும் H1N1 தொற்று காரணமாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றின் காரணமாக குறித்த மாகாணத்தின் பிரபல பல்கலைக்கழகமான பேராதனை பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதும் குறிப்பிடத் தக்கது..
H1N1 வைரஸ் தொற்று சிறீலங்காவில் பரவியுள்ளதனை சிறீலங்கா அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக கட்டார் வெளிவிவகார அமைச்சின் டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தொற்றினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் சுகாதார பிரச்சினை சீராகும் வரையில் கட்டார் பிரஜைகள் சிறிலங்காவுக்கு பயணிக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.