நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்!

0
605

siranyமுன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க  கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு விஜயம் செய்து  நீதியரசாக  கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

தற்போதய பிரதம நீதியரசர் மொஹான் பிரீஸ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உயர் நீதிமன்றத்திற்கு முன்பாக காலை ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ள நிலையில் சிராணி பண்டாரநாயக்க உயர் நீதிமன்றத்திற்கு விஜயம் செய்து கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இவர் இன்று   பிரதம நீதியரசராக பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ளார், இருப்பினும் இதுவரை காலமும் பிரதம நீதியரசராக பதவியில் இருந்த மொஹான் பிரீஸ் பதவி விலகாத நிலையில் இவர் கடமைகளை பொறுப்பேற்றுள்ளமையால் நாட்டில் தற்போது இரண்டு பிரதம நீதியரசர்கள் கடமையில் உள்ளனர்.

இதேவேளை சிராணி பண்டாரநாயக்க பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில் அவரின்  பதவிக்கு உயர் நீதிமன்ற நீதியரசர் கே. ஸ்ரீபவன் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here