மூன்றாவது நாளாக வவுனியாவில்தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்.!

0
101

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் மூன்றாவது நாளாக இடம்பெற்று வருகின்றது.
வவுனியா – கந்தசாமி ஆலயத்தில், கடந்த வெள்ளிக்கிழமை (24) காலை 11.30 மணியளவில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு குறித்த உணவு தவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவு வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here